மீண்டும் பரபரப்பாகும் பிரான்ஸ் அரசியல்... 12 பில்லியன் யூரோக்கள் இழப்பு
பட்ஜெட் தாமதத்தால் ஏற்கனவே பிரான்சுக்கு 12 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்வதில் மீண்டும் பிரச்சினை உருவாகியுள்ளது.
மீண்டும் பரபரப்பாகும் பிரான்ஸ் அரசியல்...
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்ததிலிருந்தே பிரான்ஸ் அரசியலில் குழப்பம்தான் நிலவுகிறது.
ஒரே ஆண்டில் நான்கு பிரதமர்களை தேர்வு செய்யும் நிலையும் உருவானது.
இந்நிலையில், நான்காவதாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஃப்ரான்கோயிஸ் பேய்ரோ (Francois Bayrou) பதவிக்கும் சிக்கல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, முந்தைய பிரதமரான மிஷெல் பார்னியேர், சிறப்பு அரசியல் சாசன அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதுவே அவர் பதவியிழக்கக் காரணாமாக அமைந்தது.
அதாவது, எதிர்க்கட்சியினர் பார்னியேர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார்கள். அவர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்ததால் பதவியிழக்க நேர்ந்தது.
இந்நிலையில், புதிய பிரதமரான ஃப்ரான்கோயிஸும், சிறப்பு அரசியல் சாசன அதிகாரத்தைப் பயன்படுத்தி பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.
அவர் அப்படி சிறப்பு அரசியல் சாசன அதிகாரத்தைப் பயன்படுத்தி பட்ஜெட் தாக்கல் செய்யும் பட்சத்தில், அவர் மீதும் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவார்கள்.
அதில் அவர் தோல்வியடைந்தால், அவரது அரசும் கவிழும் அபாயம் உள்ளது.
விடயம் என்னவென்றால், பட்ஜெட் நிறைவேறாததால் ஏற்பட்டுள்ள நிலையில்லாத்தன்மையால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு, ஏற்கனவே சுமார் 12 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
ஆகவே, இம்முறையும் பட்ஜெட் நிறைவேறவில்லையென்றால், அதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |