கொலை செய்யப்பட்ட பிரெஞ்சு பள்ளி மாணவி... ஜனாதிபதி மேக்ரான் சொன்ன விடயம்

Crime
By Arbin Jun 07, 2026 11:40 PM GMT
Report

பிரான்ஸ் முழுவதும் பரவலாகக் கொந்தளிப்பை ஏற்படுத்திய 11 வயது பள்ளி மாணவியின் கொலைக்காக, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பில் இருந்தவர்

கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நபரிடம் முந்தைய சிறார் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த காவல்துறை தவறிவிட்டது என்பதே மக்களின் கொந்தளிப்புக்கு காரணம்.

கொலை செய்யப்பட்ட பிரெஞ்சு பள்ளி மாணவி... ஜனாதிபதி மேக்ரான் சொன்ன விடயம் | French Schoolgirl Murdered

இந்த நிலையில், இனி ஒருபோதும் இல்லை என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியபடி, அந்தச் சிறுமியின் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமையன்று தென்மேற்குப் பகுதியிலுள்ள ஃப்ளூரன்ஸ் கிராமத்தில் இறுதி ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றனர்.

குழந்தைகள் உட்பட பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் வெள்ளைச் சட்டை அல்லது டி-ஷர்ட்களை அணிந்திருந்தனர்; அவற்றில் பலவற்றில், மரணமடைந்த அந்த இளம் சிறுமியின் புன்னகைக்கும் முகம் பொறிக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் பொதுமக்களிடையே துயரத்துடன் ஆழ்ந்த அதிர்ச்சியும் கோபமும் கலந்திருக்கின்றன. சிறுமியின் மாயம் மற்றும் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நபர் 2017-ஆம் ஆண்டிலிருந்தே காவல்துறையின் கண்காணிப்பில் இருந்தவர் என்பது தெரியவந்ததையடுத்து,

இந்தக் கொலை சம்பவம் பிரான்சின் நீதித்துறையில் நிலவும் தாமதங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்த தீவிரமான தேசிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

சாகோஸ் தீவுகளை வாங்குவது குறித்து பரிசீலித்து வரும் டொனால்ட் ட்ரம்ப்

சாகோஸ் தீவுகளை வாங்குவது குறித்து பரிசீலித்து வரும் டொனால்ட் ட்ரம்ப்

இந்த நிலையில், சட்ட அமைப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தோல்வி ஏற்பட்டிருந்ததை பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் ஒப்புக்கொண்டார்.

குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்ற உண்மையை நாம் புறக்கணிக்க முடியாது என்று கடந்த வாரம் மாண்டினீக்ரோ விஜயத்தின்போது அவர் கூறியிருந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையும் பள்ளித் தூய்மைப் பணியாளருமான ஜெரோம் பரேலாவுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்ட ஒரு சாம்பல் நிறக் காரில், தொடர்புடைய சிறுமி மே 29 அன்று ஜெர்ஸ் மாகாணத்தின் ஃப்ளூரன்ஸ் நகரில் ஏறுவது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

சிறுமி காணாமல் போன இடத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள, பயன்பாட்டில் இல்லாத தானியக் கிடங்கு ஒன்றில் ஏழு நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

10 வயது சிறுமி

இந்த நிலையில் சிறுமியைக் கொன்றதை மறுத்த பரேலா, அவரை உள்ளூர் நீச்சல் குளத்தில் இறக்கிவிட்டதாகக் காவல்துறையிடம் கூறியுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 10 வயது சிறுமியின் தாய், அவர் தனது மகளைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட பிரெஞ்சு பள்ளி மாணவி... ஜனாதிபதி மேக்ரான் சொன்ன விடயம் | French Schoolgirl Murdered

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை மற்றும் குழந்தைக்கு பாலியல் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய காயங்கள் இருந்ததை உறுதிப்படுத்தும் உளவியல் மற்றும் மருத்துவ அறிக்கைகளை உள்ளடக்கிய முதற்கட்ட ஆய்வறிக்கையானது ஜனவரி மாதம், அருகிலுள்ள துலூஸ் நகர காவல்துறையினரால், அவரிடம் விசாரணை நடத்துவதற்கான அறிவுறுத்தலுடன், ஆச் நகரில் உள்ள அரசு சட்டத்தரணிகள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இருப்பினும், அரசு சட்டத்தரணிகள் அலுவலகம் பல வாரங்களாக அந்தக் கோப்பைத் திறக்கத் தவறியதாகவும், பின்னர் அந்த வழக்கிற்கு அதிகாரிகளை நியமிக்க மேலும் ஆறு வாரங்கள் எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பள்ளி மாணவி கடத்தப்பட்டு கொல்லப்படுவதற்கு முந்தைய மூன்று மாதங்களில், பரேலா இன்னும் தொடர்பு கொள்ளப்படவோ அல்லது விசாரணைக்காக அழைக்கப்படவோ இல்லை.

இந்த நிலையில், பிரான்சின் நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவிக்கையில், தற்போது 3 மில்லியன் காவல்துறை புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றில் 70,000 புகார்கள் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள் தொடர்பானவை என்றும் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US