அதிகம் பழக்கமில்லாத 2 நண்பர்களை வீட்டில் தங்கவைத்த திருமணமான பணக்கார இளைஞன்! நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்.. எச்சரிக்கை செய்தி
இந்தியாவில் நண்பன் வீட்டில் இரவில் தங்கியிருந்து பணத்துக்காக அவரையும், மனைவி, குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்த இரண்டு கொடூரன்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் பிரேம் கிஷோர். இவர் மனைவி லலிதா தேவி. தம்பதிக்கு நைதிக் என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் கழுத்து அறுக்கப்பட்டு மூவரும் சடலமாக வீட்டில் கிடந்தனர், மூவரின் முகங்களும் பாலித்தீன் கவரால் மூடப்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலங்களை கைப்பற்றிவிட்டு விசாரணையை தொடங்கினர். பிரேமுக்கு தெரியாத யாரோ நபர்கள் தான் கொள்ளையடிக்கும் நோக்கில் இச்செயலை செய்திருக்க வேண்டும் என பொலிசார் முதலில் நினைத்தனர்.
ஆனால் வீட்டு வாசலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். ஏனேனில் சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு இரண்டு ஆண்கள் பிரேம் வீட்டில் இருந்து வெளியில் சென்றது தெரியவந்தது. இருவரின் புகைப்படங்களை பிரேம் வீட்டில் பொலிசார் ஏற்கனவே பார்த்ததே அதிர்ச்சிக்கு காரணம்.
இதையடுத்து கவுரவ் மற்றும் சவுகான் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நினைத்து பார்க்க முடியாத திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கவுரவும், சவுகானும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரேமுடன் ஒரே இடத்தில் வேலை செய்துள்ளனர். பின்னர் பிரேம் சுயமாக தொழில் தொடங்கி நல்ல நிலைக்கு வந்து பணக்காரர் ஆகியிருக்கிறார்.
இதை சமீபத்தில் தெரிந்து கொண்ட இருவரும் பிரேமுடன் நட்பை மீண்டும் புதுப்பித்தனர். சம்பவத்தன்று இரவு பிரேம் வீட்டுக்கு வந்த கவுரவ், சவுகான் தங்கள் ஊருக்கு செல்ல வேண்டிய இரயில் புறப்பட்டு விட்டது. அதனால் இன்று ஒருநாள் எங்களுக்கு வீட்டில் தங்க இடம் கொடு என்றனர்.
அவரும், நண்பர்கள் தானே என நம்பி என தங்க இடம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து நள்ளிரவில் நன்றாக தூங்கி கொண்டிருந்த பிரேம், லலிதா, நைனிக் ஆகிய மூவரையும் அவர்கள் கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த பணத்துடன் தப்பியது தெரியவந்தது.
இது போல அதிகம் தொடர்பில்லாத நபர்களை வீட்டில் நம்பி தங்க வைக்கக்கூடாது என பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.