இனி முகக்கவசம் அணிய தேவையில்லை! புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அமெரிக்கா
அமெரிக்காவில் முழுவதுமாக 2 தடுப்பூசி டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்கள் தொகையில் இதுவரை 43 சதவீதத்தினர் குறைந்தது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர். அதில் 29 சதவீதத்தினர் முழுவதுமாக (2 டோஸ்) தடுப்பூசியை எடுத்த கொண்டுள்ளனர்.
மொத்தம் 140 மில்லியன் மக்களுக்கு குறைந்தது முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அறிவித்துள்ளது.
இந்நிலையில், CDC ஒரு புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
If you are fully vaccinated against #COVID19, you can start doing many things that you had stopped doing because of the pandemic. If you haven’t been vaccinated yet, get a vaccine as soon as you can. See full details: https://t.co/s5kXwg65fB pic.twitter.com/fvhehUiiCi
— CDC (@CDCgov) April 27, 2021
அதன்படி, அமெரிக்காவில் முழு அளவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் முக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் முகக்கவசம் அணியாமல் நடைபயிற்சி போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் பாதுகாப்பாக ஈடுபட முடியும், ஆனால் அவர்கள் தேவைப்படும் பொது இடங்களில் தொடர்ந்து முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு நாடு எடுத்துள்ள நடவடிக்கைகளின் விளைவாக இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
"உங்கள் அனைவரின் ஒத்துழைப்பாலும் நாம் இந்த அதிர்ச்சியூட்டும் முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்" என்று கூறிய பைடன், தடுப்பூசிகள் அதிகரித்துள்ளதால் மூத்த குடிமக்கள் மத்தியில் இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறினார்.