புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் ஒற்றை பரிசோதனை! விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தகவல்
ஒற்றை இரத்த பரிசோதனையில் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே 50 வகையான புற்றுநோயைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
'கேலரி' (Galleri) என்ற எளிய இரத்த பரிசோதனையின் மூலம் 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புற்றுநோய்களைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அதுவும், எந்தவொரு மருத்துவ அறிகுறிகளையும் காண்பிப்பதற்கு முன்பே, போதுமான அளவிற்கு துல்லியமாக கண்டறியமுடியும் என்றும், இதனை பல புற்றுநோய்களை கண்டறியும் பரிசோதனையாகப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆராய்ச்சியை உருவாக்கி நிதியளித்த அமெரிக்க நிறுவனமான GRAIL, Inc., சமீபத்தில் பல புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிதல் இந்த பரிசோதனையை அமெரிக்க மருந்து கடைகளில் கிடைக்கச் செய்துள்ளது.
இது மார்பக, கர்ப்பப்பை வாய், புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய்களுக்கான பிற தற்போதைய ஸ்கிரீனிங் நடைமுறைகளுக்கு துணைபுரிகிறது.
மொத்தம் 134,000-க்கும் மேற்பட்ட நபர்கள் GRAIL-ன் இரத்த பரிசோதனை மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்றுள்ளனர். இந்த பரிசோதனை புற்றுநோயின் இருப்பிடத்தையும் கண்டறிய உதவுகிறது.
"இந்த சோதனைகளில் புற்றுநோய் சமிக்ஞை கண்டறியப்பட்டால், உடலில் புற்றுநோய் எங்குள்ளது என்பதை அதிக துல்லியத்துடன் சுட்டிக்காட்டுகிறது" என்று கிரெயிலின் தலைமை மருத்துவ அதிகாரியும் வெளி விவகாரங்களின் தலைவருமான டாக்டர் ஜோசுவா ஆஃப்மேன் (Joshua Ofman) தெரிவித்தார்.
மிகவும் ஆபத்தான பல புற்று நோய்களை ஆரம்பகாலத்தில் கண்டறிவதால், இந்த 'கேலரி' இரத்த பரிசோதனையின் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.