டோனி கிடையாது... இவர் தான் சிறந்த கேப்டன்! CSK கோப்பையை வென்ற நிலையில் ரசிகர்களை கடுப்பேற்றிய பிரபல வீரர்
ஐபிஎல்2021 கோப்பையை சென்னை அணி வென்றுள்ள நிலையில் டோனியை விட ரோகித் சர்மா தான் சிறந்த கேப்டன் என்பது போல கம்பீர் பேசி ரசிகர்களை மீண்டும் கடுப்பேற்றியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது.
சென்னை அணியின் இந்த வெற்றியை தொடர்ந்து முன்னாள் வீரர்கள் பலர் சென்னை அணியையும், சென்னை அணியின் நம்பிக்கை நாயகன் கேப்டன் டோனியையும் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர். சேவாக், மைக்கெல் வான், ஆஷிஸ் நெஹ்ரா போன்ற முன்னாள் வீரர்கள் பலர் டோனியை மனதார பாராட்டி வரும் நிலையில், கவுதம் கம்பீர் மட்டும் டோனியை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார்.
கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், டோனி ஐபிஎல் வரலாற்றின் மிக சிறந்த கேப்டன் என்று கருதுகிறீர்களா என கேள்வி கேட்கப்பட்டது, இதற்கு உடனடியாக இல்லை என பதிலளித்த கவுதம் கம்பீர், ரோஹித் சர்மா தான் ஐபிஎல் வரலாற்றின் மிக சிறந்த கேப்டன் எனவும் பதலளித்துள்ளார்.
மேலும் டோனியை விட ரோஹித் சர்மா கூடுதலாக ஒரு கோப்பையை வென்றுள்ளார் என கூறினார். இதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளஸி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரைத் தான் சென்னை அணி தக்கவைக்க வேண்டும். இவர்கள் இல்லை என்றால் சிஎஸ்கே நிச்சயம் கோப்பை வென்றிருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
கவுதம் கம்பீரின் இந்த வன்மமான வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல் கவுதம் கம்பீரை மீண்டும் சென்னை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.