வெற்றி தோல்வி எனக்கு புதுசு இல்ல! திமுகவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட கானா பாலா தோல்வி
சென்னையில் 72வது வார்டில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட பாடகர் கானா பாலா தோல்வியை சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 19 ஆம் திகதி அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவானது என மாநில தேர்தல் அறிவித்திருந்தது. அதாவது தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் தி.மு.க. 90 சதவீதம் வெற்றிகளை ருசித்துள்ளது.
குறிப்பாக மாநகராட்சியில் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிக வார்டுகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன. இந்நிலையில், சென்னை 72வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட கானா பாலா முதல் சுற்று முடிவில் 3,534 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
திமுக வேட்பாளரை விட 468 வாக்குகள் அதிகம் பெற்று கானா பாலா முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது சுற்றில் 8303 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்ற நிலையில் 6095 வாக்குகள் பெற்று கானா பாலா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.