கடலில் படகு கவிழ்ந்ததால் மனைவியுடன் நூலிழையில் உயிர் தப்பிய கங்குலியின் சகோதரர்
கடலில் படகு கவிழ்ந்ததால் நூலிழையில் மனைவியுடன் உயிர் தப்பிய கங்குலி சகோதரரின் வீடியோ வெளியாகியுள்ளது.
உயிர் தப்பிய கங்குலியின் சகோதரர்
இந்திய மாநிலமான ஒடிசா, பூரி கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சகோதரர் சினேகாஷிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி நூலிழையில் உயிர் தப்பினர்.
சவுரவ் கங்குலியின் சகோதரர் சினேகாஷிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது அங்கு இருந்த உயிர்காப்பாளர்கள் உடனடியாக செயல்பட்டு அவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
இவர்கள் இருவரும் படகில் பயணித்துக் கொண்டிருந்தபோது தான் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்துக்கு படகு ஓட்டுபவரின் அலட்சியமே காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |