கௌதம் கம்பீர் மீது கங்குலி கடும் தாக்கு! இந்திய அணியின் படுதோல்வி எதிரொலி
வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, ஷமி ஆகியோர் மீது பயிற்சியாளர் கௌதம் காம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும் என சௌரவ் கங்குலி தாக்கியுள்ளார்.
படுதோல்வி
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 124 ஓட்டங்கள் இலக்கை அடைய முடியாமல் படுதோல்வியுற்றது.
இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் கௌதம் கம்பீரின் (Gautam Gambhir) பயிற்சி மீது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
குறிப்பாக, CAB தலைவர் சௌரவ் கங்குலி (Sourav Ganguly) பயிற்சியாளர் கம்பீரை கடுமையாக சாடியுள்ளார். 
கங்குலி சாடல்
அவர், இந்திய துடுப்பாட்ட வரிசையில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்ல, Protea சுழற்பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்தியதால் பயிற்சியாளரின் உத்தி பின்வாங்கியது.
டெஸ்ட் போட்டிகளில் 350 முதல் 400 ஓட்டங்களை எடுக்காமல் போட்டிகளில் வெல்வது மிக கடினம். 3 நாட்களில் போட்டிகளை முடிக்க நினைக்காமல், 5 நாட்களும் விளையாடி வெற்றி பெற வேண்டும்.
பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் மீது பயிற்சியாளர் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்.
முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 124 ஓட்டங்களை சேசிங் செய்திருக்க வேண்டும் என தெரிவித்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |