இந்தியாவோட மோசமான தோல்வி இது தான்! முதன் முறையாக வெளிப்படையாக சொன்ன கங்குலி
பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான கங்கு, கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் இந்தியாவோட மோசமான தோல்வி எது என்பது குறித்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி, பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற பின்பு பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்.
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில், கோப்பையை இந்தியா எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று டோனியை ஆலோசகராக நியமித்தார்.
அதன் பின் இந்த உலகக்கோப்பை தொடரில், இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியது.
இந்நிலையில், இது குறித்து கங்குலி வெளிப்படையாக பேசியுள்ளார். நான் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் இந்திய அணி சந்தித்த பெரிய தோல்வியை, சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரை தான் நான் பார்க்கிறேன்.
இந்த உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.
இந்த உலகக்கோப்பை போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளின் பட்டியலில் இந்திய அணி இருந்தது. ஆனால் இந்திய அணியின் ஆட்டமோ வேறு மாதிரி இருந்துவிட்டது என்று கூறியுள்ளார்.