ரோகித்தை கேப்டனாக்கியது ஏன்? உண்மையை உடைத்த கங்குலி
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டது குறித்த உண்மையை பிசிசிஐ தலைவர் கங்குலி வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் புதிய ஒருநாள் கேப்டனாக ரோகித் சர்மா நேற்று அறிவிக்ப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடங்கும் ஒருநாள் போட்டி தொடரில் கோலிக்கு பதிலாக ரோகித் கேப்டனாக பொறுப்பேர்ப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியதாவது, பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் சேர்ந்து தான் ரோகித்தை கேப்டனாக்க முடிவு எடுத்தோம்.
உண்மையில், டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. ஆனால், அவர் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு வெவ்வேறு கேப்டன்கள் இருப்பதை தேர்வாளர்கள் விரும்பவில்லை.
எனவே, கோலி டெஸ்ட் அணி கேப்டனாக மட்டும் தொடரவும், அவருக்கு பதிலாக ரோகித் ஒருநாள் கேப்டனாக நியமிக்க முடிவெடுக்கப்பட்டது.
நான் தனிப்பட்ட முறையில் கோலியிடம் பேசினேன், தேர்வாளர்களின் தலைவரும் கோலியிடம் பேசினார்.
ரோகித் சர்மாவின் கேப்டனசி மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, விராட் கோலி டெஸ்ட் அணி கேப்டனாக தொடருவார்.
இந்திய கிரிக்கெட் நல்லவர்கள் கையில் இருப்பதாக பிசிசிஐ நம்புக்கையுடன் இருக்கிறது.
ஒருநாள் போட்டியில் கேப்டனாக விராட் கோலி சிறப்பாக பங்காற்றியதற்கு நாங்கள் அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என கங்குலி தெரிவித்துள்ளார்.