மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கோலி- கங்குலி மோதல்? அடுத்தடுத்து வெளியாகும் தகவல்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த கையோடு, கோலி அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
கோலியின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது என்றாலும், அவரது தனிப்பட்டி முடிவு என பலரும் கருத்து தெரிவித்தனர்.
மேலும் என்ன நடந்திருக்கும்? கோலிக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்ற கோணத்திலும் ரசிகர்களை விவாதிக்க தொடங்கினர்.
இந்நிலையில் கங்குலி- கோலி மோதல் குறித்து சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, டி20 அணித்தலைவர் பதவியிலிருந்து கோலி விலகும் போது, தொடர்ந்து அணித்தலைவராக செயல்பட வலியுறுத்தினோம், ஆனால் அவர் மறுத்துவிட்டார் என கங்குலி தெரிவித்தார்.
இதனை மறுத்து பேசிய கோலி, தொடர்ந்து செயல்பட பிசிசிஐ சார்பில் யாரும் கேட்டுக்கொள்ளவில்லை என தெரிவித்தார்.
இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இதுதொடர்பில் மேலும் ஒரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கோலி மறுத்து பேசியது குறித்து விளக்கம் அளிக்க கங்குலி நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டதாகவும், தென் ஆப்பிரிக்க தொடர் இருப்பதால் நோட்டீஸ் சங்கடங்களை உருவாக்கும் என்பதால் வேண்டாமென கங்குலியை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.
இதன்பின்னரே நோட்டீஸ் அனுப்பும் எண்ணத்தை கங்குலி கைவிட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.