காய்ச்சல், சளி, இருமல் நோய்களை ஓட ஓட விரட்டும் பூண்டின் அற்புத பலன்கள்!
தினமும் உணவில் பயன்படுத்தப்படும் பூண்டில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. பூண்டு அல்லில்சிஸ்டின் என்ற வேதிப் பொருள் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. சிலருக்கு உடலில் சத்து குறைந்தாலோ அல்லது எலும்புகள் வலுவிலுந்தாலோ பூண்டை சாப்பிட்டால் இந்தப் பிரச்சினைகளை சரிசெய்யும்.
உணவில் பூண்டு சுவையை அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது.
சரி உணவில் பூண்டின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் -
1. பூண்டை நாம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
2. மழைக்காலங்களில், பூண்டை அதிகமாக சேர்த்துக் கொண்டால் அதில் உள்ள ஆன்டிபயாடிக் வைரஸால் ஏற்படும் காய்ச்சல், சளி போன்றவற்றை வராமல் தடுக்கும்.
3. தினமும் பூண்டை சமையலில் சேர்த்து சாப்பிடும்போது சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
4. பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் Coronary artery என்ற நோயை தடுக்கும்.
5. காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
6. உணவில் தினமும் பூண்டை சேர்த்துக் கொண்டு வந்தால் செரிமானப் பிரச்சினை போக்கும். வாயு தொல்லை நீங்கும்.
குறிப்பு :
1. தினமும் சமைக்கும் போது பூண்டை முழுதாக போடாமல் நறுக்கி போடுங்கள்.
2. நறுக்கிய உடன் பூண்டை பயன்படுத்தக்கூடாது. 10 நிமிடங்கள் கழித்து சமைக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |