கனடா உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜேர்மனிக்கு வழங்கப்படும் எரிவாயு மேலும் குறைக்கப்படும்: புடின் எச்சரிக்கை
எரிவாயு அனுப்ப பயன்படும் இயந்திரத்தை கனடா உடனடியாக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்காவிட்டால், ஜேர்மனிக்கு அனுப்பப்படும் எரிவாயுவின் அளவு மேலும் குறைக்கப்படும் என எச்சரித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.
எரிவாயு அனுப்ப பயன்படும் இயந்திரத்தை கனடா உடனடியாக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்காவிட்டால், ஜேர்மனிக்கு அனுப்பப்படும் எரிவாயுவின் அளவு மேலும் குறைக்கப்படும் என எச்சரித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.
கனடா அந்த இயந்திரத்தை சரி செய்து ரஷ்யாவுக்குக் கொடுத்தால்தான், ஜேர்மனிக்கு எரிவாயு கிடைக்கும்.
ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், கனடா அந்த இயந்திரத்தை ரஷ்யாவுக்குத் திருப்பிக் கொடுக்கக்கூடாது, அப்படிக் கொடுத்தால் அது தடைகளை மீறும் செயலாகும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.
இந்நிலையில், அந்த இயந்திரத்தைப் பழுது நீக்கி, ரஷ்ய எரிவாயு நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுக்க, Siemens Canada நிறுவனத்துக்கு கனடா அரசு குறிப்பிட்ட காலத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
Photo - Sputnik/Aleksey Nikolskyi/Kremlin via Reuters
ஆனால், அதற்கான முறையான ஆவணங்கள் இன்னமும் ரஷ்யாவுக்கு வந்து சேரவில்லை என புடின் கூறியுள்ளார்.
அப்படி அந்த இயந்திரம் சீக்கிரம் ரஷ்யாவுக்கு வந்து சேராவிட்டால் ஜேர்மனிக்கு அனுப்பப்படும் எரிவாயுவின் அளவு நாளொன்றிற்கு 60 மில்லியன் கியூபிக் மீற்றர்களிலிருந்து 30 மில்லியன் கியூபிக் மீற்றர்களாக, அல்லது அல்லது ஐந்தில் ஒரு பங்காக குறைக்கப்படும் என எச்சரித்துள்ளார் அவர்.
மேலும், Gazprom நிறுவனம் இதுவரை தான் வாக்களித்ததை நிறைவேற்றியே வந்துள்ளது என்று கூறியுள்ள புடின், நமது கூட்டாளர்கள் தங்கள் சொந்த தவறுகளால் உருவாகியுள்ள பிரச்சினைகளின் பழியை அடிப்படையே இல்லாமல் Gazprom நிறுவனத்தின் மீது சுமத்த முயன்றுவருகிறார்கள் என்று கூறியுள்ளார்.