மைக்ரோசாப்ட் பெண் ஊழியர்கள் பலருடன் நெருக்கம்: பில் கேட்ஸின் அறியப்படாத பக்கங்கள்
பெண் ஊழியர்கள் பலரிடம் உடல் ரீதியான நெருக்கமே மைக்ரோசாப்ட் நிர்வாகக்குழுவில் இருந்து பில் கேட்ஸ் விலக காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பில் கேட்ஸ், தமது நிறுவனத்தில் பணியாற்றிய பல பெண் ஊழியர்களுடன் நெருக்கமான உறவில் இருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுவே அவர் மைக்ரோசாப்ட் நிர்வாகக்குழுவில் இருந்து விலகவும் காரணமாக அமைந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பெண் பொறியாளர் ஒருவர் 2019ல் எழுதிய கடிதம், நிர்வாகக் குழுவினரை விசாரணைக்கு தூண்டியது.
குறித்த கடிதத்தில் அந்த பெண் ஊழியர், பில் கேட்ஸ் உடன் பல ஆண்டுகளாக உடல் ரீதியான நெருக்கம் இருந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஊழியர் ஒருவருடன் உடல் ரீதியான நெருக்கம் ஏற்படுத்திக் கொள்வது பொருத்தமற்ற செயல் என நிர்வாகக்குழு கண்டறிந்தது. மட்டுமின்றி 1994ல் மெலிண்டாவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் பில் கேட்ஸ் பல பெண் ஊழியர்களிடம் தமது ஆசையை தெரியப்படுத்தி வந்தார் என்பது வெளியாகியுள்ளது.
ஆனால், எவரையும் அவர் கட்டாயப்படுத்தவில்லை எனவும், விருப்பம் இருப்பவர்களுடனையே உடல் ரீதியான நெருக்கம் ஏற்படுத்திக்கொண்டார் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிர்வாகக்குழு முன்னெடுத்த விசாரணையில், பில் கேட்ஸ் தமது நிலையை ஒப்புக்கொண்டதுடன் தலைவர் பொறுப்பில் இருந்து மார்ச் 13, 2020ல் ராஜினாமா செய்துகொண்டார்.
இதன் தொடர்ச்சியாகவே, தமது 27 ஆண்டுகால திருமண உறவில் இருந்து பிரிவதாக கேட்ஸ் மெலிண்டா தம்பதி அறிவித்துள்ளனர்.
மேலும் தங்கள் விவாகரத்திற்கான காரணம் தொடர்பில் இருவரும் எதையும் குறிப்பிடவில்லை.