கொரோனாவை ஒழிக்க... எவ்வளவு சீக்கிரம் இதை செய்ய முடியுமோ செய்துவிடுங்கள்! பிரித்தானியாவுக்கு பில் கேட்ஸ் விலியுறுத்தல்
அமெரிக்க கோடீஸ்வரரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ், பிரித்தானியாவுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளுக்கு உதவியளிக்க தேசிய வருமானத்திலிருநு்து 0.7 சதவிதம் நிதியளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்த பிரித்தானியா, தொற்றுநோய் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக அதை குறைத்துள்ளது.
தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் கூடிய விரைவில் பிரித்தானியா வெளிநாடுகளுக்கு உதவியளிக்க வழங்கும் நிதியை மீண்டும் 0.7 சதவிதமாக வழங்க வேண்டும் என பில் கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
வளரும் நாடுகள் தடுப்பூசி பெறுவதற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதே தடுப்பூசி கூட்டணி அமைப்பான காவிக்கு ஆதரவளிப்பதில் தங்கள் நாடு வகித்த பங்கைப் பற்றி பிரித்தானியர்கள் மிகவும் பெருமைப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், தற்போது நிதியை குறைத்துள்ள பிரித்தானியா, மீண்டும் 0.7 சதவிதம் வழங்காவிட்டால் அதன் தாக்கம் குறைந்துவிடும் என்று அவர் கூறினார்.
பிரித்தானியா எவ்வளவு சீக்கிரம் தனது நிதியை மீண்டும் 0.7 சதவிதமாக அளிக்கிறதோ அவ்வளவு நல்லது.
உலகெங்கிலும் தடுப்பூசிகள் பெரியளவில் கிடைத்தால், கொரோனா தொற்று அளவு 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மிகக் குறையும் என்றும் கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.