உலகை உலுக்கிய காஸா சம்பவம்... உறுதிபட தெரிவித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்
காஸா மருத்துவமனை மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் சம்பவமானது உண்மையில் காஸா பகுதியில் இருந்தே ஏவப்பட்டதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இதில் பங்கில்லை
காஸா பகுதியில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையை இஸ்ரேல் தரப்பு தாக்கியதாக தொடகத்தில் ஹமாஸ் குற்றஞ்சாட்டியது. ஆனால் தங்களுக்கு இதில் பங்கில்லை என இஸ்ரேல் கடுமையாக மறுத்தது.
@getty
மட்டுமின்றி, ஹமாஸ் ஆதரவு இயக்கம் ஒன்றே தாக்குதலை தொடுத்துள்ளதாக இஸ்ரேல் குறிப்பிட்டது. தொடக்கத்தில் மொத்தம் 500 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், உண்மையான எண்ணிக்கை மிக மிக குறைவு என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ரிஷி சுனக் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் நோக்கி வீசப்பட்ட ஏவுகணை என்றே சுனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் படைகளுக்கும்
மேலும், இனி காஸா அல்லது பாலஸ்தீனத்தின் எந்தவொரு பகுதியிலும் ஹமாஸ் அதிகாரம் செலுத்த முடியாது என்றார். மேலும், காஸா பகுதி அப்பாவி மக்களுக்காக கூடுதலாக 20 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி அளிக்கப்படும் எனவும், காஸாவில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றார்.
மேலும், மத்திய கிழக்கில் நடந்து வரும் போரை உக்ரைனில் புடினின் கொடூரங்களுடன் ஒப்பிட்ட ரிஷி சுனக், உக்ரைனில் புடின் தோல்வியடைவது உறுதி என குறிப்பிட்டுள்ளதுடன், ஹமாஸ் படைகளுக்கும் அதே நிலை தான் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |