க.பொ.த உயர்தர, சாதாரணதர பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? வெளியாகியுள்ள தகவல்
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை மீண்டும் ஒத்திப் போடுவதற்கான எந்தவித தீர்மானத்தையும் கல்வியமைச்சு மேற்கொள்ளவில்லை என அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவித்துள்ள அவர், தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள நாட்களில் இரண்டு பரீட்சைகளையும் நடத்துவதே கல்வியமைச்சின் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
இவ் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்துடன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மூன்றாம் திகதி நடத்துவதற்கும், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதியில் நடத்துவதற்கும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022