பொதுத்தேர்தலில் வெற்றி நிச்சயம் இல்லை: ஒப்புக்கொண்டார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்
உள்ளாட்சித் தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் என உறுதியாகக் கூறமுடியாது என்பதை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஒப்புக்கொண்டுள்ளார்.
படுதோல்வி
பிரித்தானியாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில், லேபர் கட்சி இங்கிலாந்தின் 107 கவுன்சில்களில் 1.258 இருக்கைகளை வென்றுள்ளது. ஆனால், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியோ, வெறும் 515 இருக்கைகளைத்தான் கைப்பற்றியுள்ளது. விடயம் என்னவென்றால், லிபரல் டெமாக்ரட் கட்சி, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைவிட அதிக இருக்கைகளைப் பெற்றுள்ளது. அக்கட்சி கைப்பற்றியுள்ள இருக்கைகளின் எண்ணிக்கை 552.
Pic: PA
பொதுத்தேர்தலில் வெற்றி நிச்சயம் இல்லை
பொதுவாகவே, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், எதிர்வரும் பொதுத்தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படும் நிலையில், இம்முறை பொதுத்தேர்தலில் லேபர் கட்சி முன்னிலை வகிக்கும் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளார்கள்.
ஆக, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, பொதுத்தேர்தலில் லேபர் கட்சி பெரும் வெற்றி பெறலாம் என்று கூறியுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், என்றாலும், நாம் ஒரு தொங்கு நாடாளுமன்றத்தை நோக்கியே சென்றுகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது என்றும் கூறியுள்ளார்.
வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |