ஜெனீவா விமான நிலையத்தில் சிக்கிய நபர்: அவரை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஜெனீவா விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய ஒருவரை அவர்கள் சோதனையிட்டபோது, அவரது வயிற்றுக்குள் 100 சிறு சிறு பாக்கெட்களில் கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
Madridஇலிருந்து ஜெனீவா வந்த அந்த நபர், தன்னிடம் ஒருவர் அந்த போதைப்பொருள் பாக்கெட்களைக் கொடுத்ததாகவும், ஜெனீவாவிலுள்ள ஒருவரிடம் அதை ஒப்படைக்குமாறு தனக்கு கூறப்பட்டதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்காக தனக்கு 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
42 வயதான அந்த நபர் மூன்று குழந்தைகளின் தந்தை ஆவார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.