புற்றுநோயால் உயிரிழந்த இலங்கைத் தமிழரான ஜார்ஜ் அழகையா: மனைவிக்காக விட்டுச் சென்ற சொத்து
பிரித்தானியாவில் வாழ்ந்துவந்தவரும், பிபிசி செய்தியாளராக பணியாற்றிவந்தவருமான இலங்கைத் தமிழர் ஜார்ஜ் அழகையா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி புற்றுநோயால் மரணமடைந்தார்.
இந்நிலையில், அவர் எழுதிவைத்துச் சென்ற உயில் தொடர்பில் சில விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
Credit: PA
மனைவிக்காக விட்டுச் சென்ற சொத்து
அழகையா, Frances என்ற பெண்ணை மணந்து, இருவரும் 39 ஆண்டுகள் இணைந்துவாழ்ந்த நிலையில், தம்பதியருக்கு Adam மற்றும் Matthew என்னும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், அழகையா எழுதிவைத்துச் சென்ற உயில் தொடர்பில் சில விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த உயிலிலிருந்து, அவர் தன் மனைவிக்காக விட்டுச் சென்ற சொத்து 49,387 பவுண்டுகள் என தெரியவந்துள்ளது.
Credit: PA:Press Association
பிபிசியின் பிரபல செய்தியாளர்களில் ஒருவரான அழகையாவின் சம்பளம், 335,000 முதல் 399,999 பவுண்டுகள் ஆகும். என்றாலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சைக்காக அவர் செலவு செய்யவேண்டியிருந்தது. ஒருமுறை அந்த சிகிச்சை செய்ய குறைந்தபட்சம் 30,000 பவுண்டுகள் வரை செலவாகும்.
1989ஆம் ஆண்டு பிபிசியில் இணைந்த அழகையா, 2008ஆம் ஆண்டு, எலிசபெத் மகாராணியாரின் கையால் Order of the British Empire என்னும் கௌரவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: George Alagiah
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |