பிரசவத்தின் போது நடந்த எதிர்பாராத துயரம்... மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்த தாயார்
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த தாயார் ஒருவர் பிரசவத்தின் போது அவரது குழந்தையின் தலையை மருத்துவர் துண்டித்துவிட்டார் என கூறி மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரசவத்தின் போது மருத்துவர்
ஜார்ஜியா மாகாணத்தில் ரிவர்டேல் பகுதியை சேர்ந்தவர் 20 வயதான ஜெசிகா ரோஸ். இவரே பிரசவத்தின் போது மருத்துவர் டிரேசியின் செயலால் குழந்தை இறந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
@AP
மட்டுமின்றி, தங்களிடம் மருத்துவமனை நிர்வாகம் உண்மையை மறைத்ததாகவும் அவர் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். முதல் குழந்தை என்பதால், அந்த தம்பதி மிகவும் உற்சாகத்துடன் காத்திருந்ததாகவும் துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் கனவுகள் மற்றும் நம்பிக்கைகள் ஒரு கனவாக மாறியது எனவும் அவர்களின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
ரோஸ்க்கு கடந்த ஆண்டு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது மற்றும் அவரது கர்ப்பம் சிக்கலை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. சம்பவத்தின் போது அவரது குழந்தையின் தோள்கள் பிறப்புறுப்பு கால்வாயில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
உள்ளூர் பொலிசார் விசாரணை
இதனையடுத்து, மருத்துவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, அதன் பின்னர் நடந்தவை மிகக் கொடூரமானவை என குறிப்பிட்டுள்ளனர்.
@AP
இதனிடையே, ரோஸ் மற்றும் டெய்லர் பிறந்த பிறகு தங்கள் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று கோரினர், ஆனால் கண்ணாடிக்குப் பின்னால் மட்டுமே அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, உள்ளூர் பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |