முதல் முறையாக புடின் ஆதரவாளர் ஒருவர் மீது ஜேர்மனி எடுத்துள்ள நடவடிக்கை
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து பல நாடுகள் அந்நாடு மற்றும் அதன் தலைமையுடன் தொடர்புடையோர் மீது தடைகள் விதித்து வரும் நிலையில், முதன்முறையாக புடின் ஆதரவாளர் ஒருவர் மீது ஜேர்மனி நடவடிக்கை எடுத்துள்ளது.
ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான பல அடுக்கு மாடிக் குடியிருப்புகளை ஜேர்மன் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மனைவிக்குச் சொந்தமான பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களுடைய வங்கிக் கணக்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜேர்மனியைப் பொருத்தவரை புடின் ஆதரவாளர் ஒருவரின் சொத்துக்கள் வெறுமனே முடக்கப்படாமல், அவை கைப்பற்றவும் பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
இந்த தம்பதியர் மீது ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.