சில மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை நிறுத்தியுள்ள ஜேர்மன் விமான நிறுவனம்
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதல் காரணமாக பதற்றம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, சில நகரங்களுக்கான விமான சேவையை ஜேர்மனியின் முக்கிய விமான நிறுவனம் நிறுத்தியுள்ளது.
எந்தெந்த நகரங்களுக்கான சேவை நிறுத்தம்?
ஜோர்டான் தலைநகரான அம்மான், லெபனான் தலைநகரான பெய்ரூட், ஈராக்கிலுள்ள எர்பில் மற்றும் இஸ்ரேலிலுள்ள டெல் அவிவ் ஆகிய நகரங்களுக்கான விமான சேவை நிறுத்துவதாக ஜேர்மனியின் லுஃப்தான்சா விமான நிறுவனம் நேற்று அறிவித்தது. திங்கள்கிழமை வரை இந்த நிலைமை நீடிக்கலாம் என லுஃப்தான்சா அறிவித்துள்ளது.
Image: Frank Hoermann/SVEN SIMON/picture alliance
ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி வரை, டெஹ்ரானுக்கான மற்றும் டெஹ்ரானிலிருந்து விமான சேவையை நிறுத்துவதாக ஏற்கனவே வெள்ளிக்கிழமையன்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |