ஜேர்மன் சான்செலர் ஓலாஃப் ஸ்கோல்ஸுக்கு கோவிட்-19 தொற்று உறுதி
வளைகுடா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ஜேர்மன் சான்செலர் ஓலாஃப் ஸ்கோல்ஸுக்கு கோவிட்-19 தொற்று உறுதி.
உக்ரைன் போரில் ஏற்பட்ட பதட்டங்களுக்கு மத்தியில் ரஷ்யா எரிவாயு விநியோகத்தை குறைத்த பின்னர், புதிய எரிசக்தி ஆதாரங்களுக்கான வேட்டையில் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஈடுபட்டார்.
ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். வளைகுடா சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு லேசான அறிகுறிகள் இருந்ததாகவும், அதையடுத்து சோதனையில் தொற்று உறுதியானதாக அவரது செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
64 வயதான அவர் அதிபர் மாளிகையில் உள்ள தனது குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், மேலும் ஓன்லைனில் கூட்டங்களில் கலந்துகொள்வார் என்று செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் ஹெபஸ்ட்ரீட் கூறினார்.
[HBQ4NLC ]
உக்ரைன் போரில் ஏற்பட்ட பதட்டங்களுக்கு மத்தியில் ரஷ்யா எரிவாயு விநியோகத்தை குறைத்த பின்னர், கடந்த வார இறுதியில், அவர் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்குச் சென்று புதிய எரிசக்தி ஆதாரங்களுக்கான வேட்டையில் ஈடுபட்டார்.
ஜேர்மனிக்கு இயற்கை எரிவாயு மற்றும் டீசல் வழங்க ஐக்கிய அரபு அமீரகம் உறுதியளித்ததையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.