’Turbo’ குடியுரிமை விண்ணப்ப முறை இனி கிடையாது; ஜேர்மனியின் புதிய அரசு அதிரடி
ஜேர்மனியில் புதிதாக அரசு அமைக்க திட்டமிட்டுள்ள கட்சிகள், ’Turbo’ குடியுரிமை விண்ணப்ப முறையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளன.
’Turbo’ குடியுரிமை கிடையாது
ஜேர்மனியின் புதிய அரசு அமைக்க கூட்டணிக்கட்சிகள் திட்டமிட்டுவரும் நிலையில், ஆட்சி அமைக்கும் முன்பே புலம்பெயர்தல் தொடர்பில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன அக்கட்சிகள்.
ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான முந்தைய ஜேர்மன் அரசு, ஜேர்மன் குடியுரிமைச் சட்டத்தில் சில மறுசீரமைப்புகளைக் கொண்டுவந்தது.
அவற்றில் ஒன்று, ஜேர்மன் மொழியில் C1 மட்டத்தில் மொழித்திறமை கொண்டவர்கள், தன்னார்வலராக பணியாற்றுதல் மற்றும் கல்வி அல்லது வேலையில் மிகப்பெரிய சாதனை படைத்தவர்கள் ஆகியோர், 3 ஆண்டுகளில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒரு நடைமுறை ஆகும்.
இந்த நடைமுறையை தற்போதைய அரசு ’Turbo’ குடியுரிமை பெறுதல் என விமர்சிக்கிறது.
ஆக, புதிய அரசு பொறுப்பேற்றபின், ’Turbo’ குடியுரிமை கிடையாது.
ஆனாலும், B1 மட்டத்தில் ஜேர்மன் மொழி பேசத்தெரிந்த, ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்த புலம்பெயர்ந்தோர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முறை நடைமுறை நீடிக்கிறது.
மேலும், கூட்டணிக்கட்சிகளிடையே இரட்டைக் குடியுரிமை குறித்து கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், இரட்டைக் குடியுரிமை அனுமதிக்கப்பட உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.