குழந்தைக்காக அகதிகள் இருவர் கொலை: ஜேர்மனியில் பயங்கரம்

Germany
By Balamanuvelan Jan 08, 2025 09:47 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

தங்களுக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக, அகதிகளாக வந்த ஒரு பெண்ணையும் அவரது தாயையும் கொன்றுள்ளார்கள் ஒரு ஜேர்மன் தம்பதியர்.

குழந்தைக்காக அகதிகள் இருவர் கொலை

தென்மேற்கு ஜேர்மனியிலுள்ள Wiesloch என்னுமிடத்தில் அமைந்துள்ள அகதிகள் காப்பகம் ஒன்றில், உக்ரைனிலிருந்து அகதியாக வந்த ஒரு 27 வயது பெண்ணும், 51 வயதான அவரது தாயும் தங்கியிருந்துள்ளார்கள்.

அப்போது, உக்ரைன் அகதிகளுக்கு உதவும் சமூக ஊடகக் குழு ஒன்றில் இணைந்த 44 வயதுடைய ஜேர்மன் பெண்ணொருவர், பிரசவத்துக்காக காத்திருந்த அந்த 27 வயது பெண்ணுக்கு மொழிபெயர்ப்பு உதவிக்காக சென்றுள்ளார்.

அந்த உக்ரைன் பெண்ணுக்கு குழந்தை பிறந்த பின், அந்த ஜேர்மன் பெண்ணும் அவரது கணவரும் உணவகம் ஒன்றிற்கு உணவருந்தச் சென்றிருந்தபோது, தங்களுடன் உணவருந்த வந்த அந்த உக்ரைன் பெண் மற்றும் அவரது தாயின் உணவில் மயக்க மருந்தைக் கலந்துள்ளார்கள்.

குழந்தைக்காக அகதிகள் இருவர் கொலை: ஜேர்மனியில் பயங்கரம் | German Couple Admit Killing Ukrainian Refugees

தனக்கு மயக்கம் வருவதாகக் கூறிய அந்த 51 வயது பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்ற அந்த ஜேர்மன் பெண்ணின் கணவர், காட்டுப்பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று, அடித்துக்கொன்று ஏரி ஒன்றில் அவரது உடலை வீசியுள்ளார்.

பின்னர் அந்த 27 வயது பெண்ணிடம் அவரது தாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அவரையும் அடித்துக் கொன்று, அவரது உடலை தீவைத்து எரித்துவிட்டு, குழந்தையை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள் அந்த ஜேர்மன் தம்பதியர்.

இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக 43 வயதுடைய அந்த ஆணும் 44 வயதுடைய அந்தப் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அது தொடர்பான வழக்கு விசாரணை தென்மேற்கு ஜேர்மனியில் துவங்கியுள்ளது.

விடயம் என்னவென்றால், அந்த தம்பதியருக்கு ஏற்கனவே நான்கு மகன்கள் இருக்கிறார்கள். இருந்தும் ஒரு பெண் குழந்தை வேண்டும் என்பதற்காக, அவர்கள் அந்த உக்ரைன் பெண்ணையும் அவரது தாயையும் கொலை செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US