அகதிகளுக்கு உதவும் குழு மூலம் இளம்பெண்ணை சந்தித்த ஜேர்மன் தம்பதி: பின்னர் நடந்த பயங்கரம்

Germany
By Balamanuvelan Sep 04, 2024 12:25 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

நீண்ட காலமாக மகள் இல்லையே என தவித்து வந்த ஒரு ஜேர்மன் தம்பதி, குழந்தைக்காக செய்த பயங்கர செயல்களால் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

அகதிகளுக்கு உதவும் குழுவில் இணைந்த ஜேர்மன் பெண்

உக்ரைன் அகதிகளுக்கு உதவும் சமூக ஊடகக் குழு ஒன்றில் இணைந்த 44 வயதுடைய ஜேர்மன் பெண்ணொருவர், பிரசவத்துக்காக காத்திருந்த 27 வயதுடைய உக்ரைன் நாட்டவரான அகதிப் பெண் ஒருவருக்கு மொழிபெயர்ப்பு உதவிக்காக சென்றுள்ளார்.

பிரசவத்துக்குப் பின், அந்த ஜேர்மன் பெண்ணும் அவரது கணவரும் உணவகம் ஒன்றிற்கு உணவருந்தச் சென்றிருந்தபோது, தங்களுடன் உணவருந்த வந்த அந்த உக்ரைன் பெண் மற்றும் அவரது தாயின் உணவில் மயக்க மருந்தைக் கலந்துள்ளார்கள்.

அகதிகளுக்கு உதவும் குழு மூலம் இளம்பெண்ணை சந்தித்த ஜேர்மன் தம்பதி: பின்னர் நடந்த பயங்கரம் | German Couple Charged In Murder Kidnapping Plot

Image: René Priebe/dpa/pr-video/picture alliance 

தனக்கு மயக்கம் வருவதாகக் கூறிய அந்த உக்ரைன் பெண்ணின் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்ற அந்த ஜேர்மன் பெண்ணின் கணவர், காட்டுப்பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று, அடித்துக்கொன்று ஏரி ஒன்றில் அவரது உடலை வீசியுள்ளார்.

பின்னர் அந்த உக்ரைன் பெண்ணிடம் அவரது தாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அவரையும் அடித்துக் கொன்று, அவரது உடலை தீவைத்து எரித்துவிட்டு, குழந்தையை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள் அந்த ஜேர்மன் தம்பதியர்.

அகதிகளுக்கு உதவும் குழு மூலம் இளம்பெண்ணை சந்தித்த ஜேர்மன் தம்பதி: பின்னர் நடந்த பயங்கரம் | German Couple Charged In Murder Kidnapping Plot

கைது

இதற்கிடையில், அந்த உக்ரைன் பெண் மற்றும் அவரது தாயைக் காணவில்லை என பொலிசாரில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

பொலிசாரிடம் கொல்லப்பட்ட அந்த உக்ரைன் பெண் மற்றும் அவரது தாயின் உடல்கள் கிடைக்க, அவர்களைக் கொன்ற ஜேர்மன் தம்பதியர் சிக்கியுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட அவர்கள் மீது விசாரணை துவக்கப்பட உள்ளது. அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட அந்தக் குழந்தையை, அவரது அத்தை உக்ரைனுக்கே கொண்டு சென்றுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US