கோவிட் காலகட்டத்தில் வேலையில்லாததால் இழப்பீடு கோரிய ஒரு தரப்பினர்: ஜேர்மன் நீதிமன்றத்தின் முடிவு
கோவிட் காலகட்டத்தில் தங்களுக்கு வேலையில்லாததால் இழப்பீடு வழங்கவேண்டும் என கோரி ஜேர்மன் இசைக்கலைஞர்கள் நீதிமன்றம் சென்றனர்.
இழப்பீடு கோரிய இசைக்கலைஞர்
கோவிட் காலகட்டத்தில் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் தங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரி, இசைக்கலைஞர்கள் சார்பில் Martin Kilger (47) என்னும் ஜேர்மன் இசைக்கலைஞர் நீதிமன்றம் சென்றிருந்தார்.
2020ஆம் ஆண்டு, மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், தனது ஐந்து இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும், அதற்காக 8,300 யூரோக்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கோரியிருந்தார் Martin.
Image: Tobias Schwarz/AFP/Getty Images
Martin, தெற்கு பவேரியாவில் இசைக்குழு, இசை மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
நீதிமன்றத்தின் முடிவு
வழக்கை விசாரித்த நிதிமன்றம், கோவிட் காலகட்டத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் வேலையிழந்த இசைக்கலைஞர்களுக்கு இழப்பீடு வழங்கத் தேவையில்லை என தீர்ப்பளித்துள்ளது.
கோவிட் காலகட்டத்தில் பொதுமுடக்கம் அவசியமான ஒன்றாக இருந்தது என்று கூறியுள்ள நீதிமன்றம், ஜேர்மன் பெடரல் அரசும், மாகாண அரசுகளும் பொதுமுடக்கத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கியதை சுட்டிக்காட்டியுள்ளது.
Image: Karl-Josef Hildenbrand/dpa/picture alliance
சிறுதொழில் செய்வோருக்கு பெடரல் அரசு சார்பில் 9,000 யூரோக்களும், கூடுதலாக சுய தொழில் செய்வோருக்கு பவேரியா மாகாண அரசு சார்பில் 5,000 முதல் 50,000 யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இசைக்கலைஞர்களுக்கென தனியாக இழப்பிடு வழங்கத் தேவையில்லை என நீதிமன்றம் கூறிவிட்டது.
அரசு தரப்பு வாதத்தின்போது, கொரோனா வைரஸ் எலோரையும்தான் பாதித்தது, சிலரை குறைவாகவும், சிலரை அதிகமாகவும் அது பாதித்தது என அரசு தரப்பு சட்டத்தரணியான Malte Weitner கூறியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |