ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜேர்மானியர்: முதன்முறையாக ஒப்புக்கொண்ட ஈரான்
ஜேர்மன் நாட்டு இளைஞர் ஒருவர் ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடயத்தை முதன்முறையாக ஈரான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜேர்மானியர்
ஈரானின் Markazi மாகாணத்திலுள்ள Arak என்னுமிடத்தில் அணு உலை அமைந்துள்ள இடத்தில் சைக்கிளில் பயணித்த ஜேர்மானியர் ஒருவரை ஈரான் அதிகாரிகள் கைது செய்யும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
அவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு ஈரானின் பயங்கர சிறையான Evin சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அவர் ஈரானிலுள்ள ராணுவ மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களை வீடியோ எடுத்து அனுப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு ஈரானில் சிறையிலடைக்கப்பட்டுள்ள விடத்தை முதன்முறையாக ஈரான் அரசு இப்போதுதான் ஒப்புக்கொண்டுள்ளது.
ஈரான் இஸ்ரேலுக்கிடையில் மோதல் உருவாகியுள்ள நிலையில், சனிக்கிழமையன்று பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், ஈரானில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரெஞ்சுக் குடிமக்கள் குறித்த விடயம் குறித்துப் பேசி, அவர்களை விடுவிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதைத் தொடர்ந்து, சிறையிலடைக்கப்பட்டுள்ள அந்த ஜேர்மன் இளைஞர் குறித்த தகவலை ஈரான் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |