ஜேர்மன் மாவட்டம் ஒன்று பேரழிவு மாவட்டமாக அறிவிப்பு: காரணம் இதுதான்
ஜேர்மன் மாவட்டம் ஒன்றில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மாவட்டம் பேரழிவு மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஜேர்மனியிலுள்ள Anhalt-Bitterfeld என்னும் மாவட்டத்தில் ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நிகழ்த்தியதைத் தொடர்ந்து அம்மாகாணம் தன்னைத்தான் பேரழிவு மாவட்டமாக அறிவித்துக்கொண்டுள்ளது.
இந்த குற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஜேர்மனியின் தகவல் பாதுகாப்பு பெடரல் அலுவலகம், இந்த சம்பவத்தால் அந்த மாவட்டம் ஜேர்மனியில் சைபர் பேரழிவுக்குள்ளான முதல் மாவட்டமாகியுள்ளது என்று கூறியுள்ளது.
இந்த சைபர் தாக்குதல் காரணமாக மொத்த மாவட்டத்தின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், அது குடிமக்களின் வர்த்தகத்தையும் பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
என்று கூறியுள்ள உள்ளூர் அலுவலர்கள், இப்போதைக்கு அதை பரிசீலனை செய்ய வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்கள். ஒரு வாரத்திற்கு இந்த பாதிப்பு இருக்கும் என்பதால், நிதியுதவிகள் வழங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள் அலுவலர்கள்.
இந்த பேரழிவு அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 158,000 பேர் வாழும் அந்த மாகாணம் பெடரல் அரசின் உதவியைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.