பதின்ம வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போட ஜேர்மன் நிபுணர் எதிர்ப்பு
பதின்ம வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஜேர்மனியின் மூத்த தடுப்பு மருந்து ஆலோசகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜேர்மன் தடுப்பூசி ஆலோசனைக் குழுவின் தலைவரான Thomas Mertens, பதின்ம வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
போதுமான அளவில் மருத்துவ தரவுகள் இல்லாத நிலையில், கண்மூடித்தனமாக மொத்தமாக இளைஞர்களுக்கு தடுப்பூசி போடுவதை பரிந்துரைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
12 முதல் 17 வயது வரையுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பது குறித்த போதுமான தரவுகள் நம்மிடம் இல்லை என்று கூறியுள்ள Thomas, ஒருவேளை காலப்போக்கில் ஜேர்மன் தடுப்பூசி ஆலோசனைக் குழு பதின்ம வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்த தனது கொள்கையை மாற்றலாம், ஆனால், அரசியல்வாதிகள் இதை செய்ய அழைப்பு விடுத்துள்ளதால் ஜேர்மன் தடுப்பூசி ஆலோசனைக் குழு அப்படி செய்யாது என்கிறார்.
ஆனால், 18 முதல் 59 வயது வரையுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தும் Thomas, அப்படிச் செய்வது கொரோனாவின் நான்காவது அலையின் தீவிரத்தை பெருமளவில் குறைக்கும் என்கிறார்.