ஜேர்மனி: பெருவெள்ள மீட்புப் பணிகளால் உருவாகியுள்ள புதிய அச்சம்
ஜேர்மனியில் இயற்கைச் சீற்றத்தின் காரணமாக உருவான பேரழிவு ஒரு புறம் இருக்க, மறுபக்கம் மீட்புப் பணியால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் சரியான சமூக இடைவெளியையோ சுகாதார நடவடிக்கைகளையோ பின்பற்றாமல் மீட்புப் பணிகளைச் செய்துவருவதால், மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
பணியில் ஈடுபட்டுள்ளவர்களோ, மீட்புப் பணி செய்யும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை எல்லாம் பின்பற்றச் சொன்னால் அது பணி செய்வோரை வெறுப்படையச் செய்து மீட்புப் பணியையே பாதிக்கும் என்கிறார்கள்.
பெருவெள்ளம் வீடுகளை மட்டுமல்ல, கொரோனாவையும் அடித்துச் சென்றுவிட்டது என்கிறார் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மற்றொருவர்.
ஆனால், அப்படி இல்லை என்று கூறும் அவசர நகரும் தடுப்பூசி மையங்களை நடத்தி வரும் Olav Kullak என்பவர், எல்லாமே அடித்துப்போய்விட்டது உண்மைதான், ஆனால் கொரோனா வைரஸ் போகவில்லை என்பதை மக்களுக்கு எப்படியாவது அறிவுறுத்தவேண்டும் என்கிறார்.
இப்போது மக்களுடைய கவலை எல்லாம் பெருவெள்ள பாதிப்பின் மீதே உள்ளது என்று கூறும் அரசு செய்தித்தொடர்பாளரான David Freichel, மக்கள் மீட்பு பணிக்காக நெருக்கமாக களத்தில் இருக்கிறார்கள்.
பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவை மேற்கொள்ள எடுக்கும் நடவடிக்கை கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார்.