போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தமுடியுமா? ஜேர்மன் வெளியுறவு அமைச்சரின் பதில்
உக்ரைனுடனான ரஷ்யப் போரை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஜேர்மன் வெளியுறவு அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஜேர்மன் அமைச்சரின் பதில்
நேற்று ஞாயிற்றுக்கிழமை, உக்ரைனுடனான ரஷ்யப் போரை நிறுத்துவதற்காக ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbockஇடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த Annalena, உக்ரைனுடனான ரஷ்யப் போரை நிறுத்துவதற்காக புடினுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு அடிப்படையே இல்லை என்று கூறிய Annalena, பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்தான் என்றும், ஆனால், தற்போதுள்ள சூழல் நம் விருப்பத்தைக் குறித்ததல்ல என்றும், இது நிஜத்தை எதிர்கொள்வதற்கான தருணம் என்றும் கூறினார்.
போர் முடிவுக்கு வருவதற்கு இது ஒன்றுதான் வழி
போர் முடிவுக்கு வருவது, உக்ரைன் தனது நிலப்பரப்பையும் அமைதியையும் மீட்டுக்கொண்டுவருவதில்தான் உள்ளது என்றார் Annalena.
இந்த கோர ரஷ்யப் போர் முடிவுக்கு வந்து, ரஷ்ய வீரர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி, இரவுகளில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் மூலம் உக்ரைன் மீது தினமும் தாக்குதல் நடத்துவது நின்றால் மட்டுமே அது சாத்தியம் என்றார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |