பாகிஸ்தான் சென்ற ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர்... திடீரென நாடு திரும்பியதன் பின்னணி
பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர், திடுதிப்பென தனது பயணத்தை முடித்துக்கொண்டுவிட்டார்.
பல நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக புறப்பட்ட ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock, முதல் நாடாக பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த நிலையில், உடனடியாக தனது பயணத்தை முடித்துக்கொண்டுவிட்டார்.
அதற்கு காரணம், Annalenaவுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான்!
பாகிஸ்தான் சென்ற Annalena, அங்கு மதிய உணவு சாப்பிட்டிருக்கிறார். அப்போது அவருக்கு நாவில் சுவை எதுவுமே தெரியவில்லையாம். இத்தனைக்கும் அவர் காலையில்தான் கோவிட் ஆன்டிஜன் பரிசோதனை ஒன்று செய்திருக்கிறார், அதில் அவருக்கு கொரோனா இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது.
என்றாலும், மீண்டும் அவர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உண்மையில் பாகிஸ்தானில் மேலும் பல நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளுக்கும் செல்ல Annalena திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக அவரது அரசு முறைப்பயணம் எதிர்பாராத முடிவுக்கு வந்துள்ளது.