ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் உக்ரைனுக்கு திடீர் பயணம்... எதற்காக தெரியுமா?
ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் திடீரென உக்ரைன் தலைநகர் கீவ்வுக்குச் சென்றுள்ளார்.
தனது திடீர் பயணம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர்.
ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, இன்று திடீரென உக்ரைன் தலைநகர் கீவ்வுக்குச் சென்றுள்ளார்.
அது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’உக்ரைன் நம்மை தொடர்ந்து சார்ந்திருக்கலாம் என்பதை அவர்களுக்கு காட்டுவதற்காக நான் உக்ரைனுக்கு பயணம் செய்துள்ளேன். எவ்வளவு காலம் வேண்டுமோ அவ்வளவு காலத்துக்கு ஆயுதங்கள் வழங்குவதன் மூலமும், மனிதநேய மற்றும் நிதி உதவிகள் வழங்குவதன் மூலம் நாம் அவர்களுக்கு ஆதரவாக நிற்போம்’ என்று தெரிவித்துள்ளார் Annalena Baerbock.
கடந்த சில வாரங்களாக ஜேர்மனி howitzerகள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றை உக்ரைனுக்கு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
Photo: Michal Cizek / AFP