ஜேர்மனியில் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கிரீன்ஸ் கட்சி முக்கிய அறிவிப்பு
ஜேர்மனியில் புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கிரீன்ஸ் கட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய கூட்டணி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் சோசியல் டெமாக்ரெட்ஸ் (SPD) மற்றும் லிபரல் எஃப்.டி.பி கட்சிகளுடன் மும்முனை பேச்சுவார்த்தைக்கு செல்ல விரும்புவதாக கிரீன்ஸ் கட்சி கூறியுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த கிரீன்ஸ் கட்சியின் இணைத் தலைவர் Robert Habeck, SPD-ஐ ஒன்றாக அணுக FDP-யிடம் அவரது கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார்.
பின் exploratory பேச்சுவார்த்தை கட்டத்திலிருந்து மும்முனை பேச்சுவாரத்தைக்கு நகர வேண்டும் என Robert Habeck கூறியுள்ளார்.
தற்போதைக்கு FDP-க்கு அழைப்புவிடுத்துள்ளோம். அவர்கள் அதற்கு எவ்வாறு பதிலளிப்பார்கள் என்று பார்ப்போம்.
கிரீன்ஸ் கட்சி இன்னும் FDP மற்றும் SPD இரண்டிலும் கணிசமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. பல விஷயங்கள் இன்னும் விவாதிக்கப்படவில்லை என Robert Habeck கூறியுள்ளார்.
கிரீன்ஸ் மற்றும் லிபரல் கட்சிகளுடன் புதிய கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைக்க இருப்பதாகவும் சோசியல் டெமாக்ரெட்ஸ் (SPD) தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் ஏற்கனவே கூறியுள்ளார்.
கூட்டணி இறுதியாகும் வரை மெர்கலே தொடர்ந்து அதிகாரத்தில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனியில் மும்முனை கூட்டணி உருவாவது இதுவே முதல் முறையாகும். நாடு ஒரு புதிய அரசியல் சகாப்தத்தில் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.