ஜேர்மனியில் ஒமிக்ரான் ஏற்படுத்தும் ஆபத்தை தடுக்க முடியாது! அரசுக்கு நிபுணர்கள் முக்கிய வலியுறுத்தல்
ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுக்ள ஒமிக்ரானை கட்டுப்படுத்த போதுமானதாக இருக்காது என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியில் டிசம்பவர் 28 முதல் கிளப்புகள் மற்றும் டிஸ்கோக்களை மூடப்படும், கால்பந்து போட்டிகளில் பார்வையாளர்களுக்கு தடை மற்றும் தனியார் கூட்டங்களில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு உட்பட பல நடவடிக்கைகள் அமுலுக்கு வருகிறது.
இதனிடையே, நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் முழு பொதுமுடக்கம் அமுல்படுத்த வாய்ப்பு இருப்பதாக சுகாதார அமைச்சர் Karl Lauterbach திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜேர்மனி அரசு முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் சரியான பாதையில் வைத்துள்ள முதல் அடி.
ஆனால், இந்த நடவடிக்கைகளால் ஒமிக்ரான் ஏற்படுத்தும் ஆபத்தை தடுக்க முடியாது என கிரீன் கட்சியின் சுகாதார நிபுணர் Janosch Dahmen தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் மருத்துவமனை கூட்டமைப்பின் தலைவர் Gerald Gass, இந்த நடவடிக்கைகள் தேவையானது தான், ஆனால் போதுமானதாக இல்லை என கூறினார்.
அதேவேளை, மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கான கடுமையான கட்டுப்பாடுகள் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என RKI வலியுறுத்தியுள்ளது.