ஜேர்மனியில் சட்டவிரோத அகதிகள் நடமாடுவதாக பொலிசாருக்கு வந்த புகார்: பின்னர் தெரியவந்த உண்மை
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் சிலர் இணைந்து மலையேற்றத்துக்குச் சென்றுவிட்டு தாங்கள் தங்கியிருந்த அறைக்குத் திரும்பினர்.
அறை வாசலில், அவர்களுக்காக பொலிசார் காத்திருந்தார்கள்!
வழிமறித்த பொலிசார்
அதாவது, அந்த வெளிநாட்டவர்கள் அனைவருமே சிரியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்கள் முறைப்படி ஜேர்மனியில் வாழ அனுமதி பெற்றவர்கள், சிலர், ஜேர்மன் குடியுரிமை பெற்றவர்கள்.
அவர்கள் யார் என தெரியவந்ததும், முறைப்படி தாங்கள் அவர்கள் தங்கியிருக்கும் அறைகளுக்கு வருவதாக கூறிச் சென்றுள்ளார்கள் ஜேர்மன் பொலிசார்.
Photograph: @RihamKousa/X
நடந்தது என்ன?
நடந்தது என்னவென்றால், இந்த வெளிநாட்டவர்கள் அரபி மொழியில் பேசிக்கொண்டு செல்லவே, யாரோ இவர்களை சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் அல்லது அகதிகள் என்று நினைத்து பொலிசாரை அழைத்துள்ளார்கள்.
மலையேற்றத்துக்குச் சென்றிருந்த இவர்களை, மலை வழியாக ஜேர்மனிக்குள் நுழைபவர்கள் என தவறாக நினைத்து அவர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.
காத்திருந்த ஆச்சரியம்
ஆனால், தங்களை சந்திக்க வந்த பொலிசார் நடந்துகொண்ட விதம் தங்களை ஆச்சரியப்படுத்தியதாக தெரிவிக்கிறார்கள் அந்த மலையேற்றக் குழுவினர்.
We are a registered hiking club in Germany, mostly Syrians from all over Germany.
— Riham Alkousaa (@RihamKousa) November 9, 2023
We went on a hike in Saxony Switzerland today and came back to our hostel to find police waiting for us.
Someone called police that a group of foreigners was seen and reported as illegal refugees! pic.twitter.com/0K4v9ju6Hd
அவர்கள் யார், எதற்காக அந்த மலைக்குச் சென்றார்கள் என்பது குறித்து சில கேள்விகள் கேட்ட பொலிசார், பின்னர், மலையேற்றத்துக்குச் செல்லும் உங்களுக்கு மகிழ்ச்சியான நேரம் அமைய வாழ்த்துக்கள் என்று கூறிச் சென்றார்களாம்.
அந்தக் குழுவில் ஒருவர், சமூக ஊடகம் ஒன்றில் நடந்ததைக் குறித்து பதிவிட, அந்தப் பதிவு வைரலாக, ஊடகவியலாளர்கள் அவர்களை மொய்த்துக்கொண்டார்களாம்.
தங்களைக் குறித்து புகாரளித்த நபரைக் குறித்தோ, எல்லா இடங்களிலும் இப்படிப்பட்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். எதிர்காலத்திலாவது இப்படி நடக்காது என்று நம்புகிறோம் என்கிறார் அந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |