'கஜினி' பட சூர்யா போல் ஜேர்மனியில் வசிக்கும் நபர்! சாலை விபத்தால் வாழ்க்கையே மாறிய சம்பவம்
ஜேர்மனியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு ஏற்பட்ட விபத்து அவரது வாழ்க்கையே மாற்றியுள்ளது.
தமிழில் சூர்யா நடித்த 'கஜினி' திரைப்படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தப் படத்தில் அவர் ஆன்டிரோகிரேட் அம்னீஷியா அல்லது குறுகிய கால நினைவாற்றல் இழப்பு எனப்படும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டதாகக் காட்டப்பட்டது.
இந்தக் கோளாறு உள்ளவர்களால் மிக சமீபத்திய விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. சிறிது நேரத்திற்கு முன்பு நடந்த தகவல் அல்லது நிகழ்வுகளை நினைவுகூரவே அவர்கள் போராடுகிறார்கள். அவர்கள் சில நொடிகளில் அல்லது சில நாட்களில் நினைவாற்றலை இழக்க நேரிடும்.
ஜேர்மனியில் இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்க நபர் சமீபத்தில் செய்திகளில் பிரபலமானார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரியைப் பார்க்கச் செல்லும் வழியில், துரதிர்ஷ்டவசமாக அதிவேக விபத்தில் சிக்கினார். பிறகு அவசர சிகிச்சைக்காக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டது.
Credit: Arte
இந்த சோகமான விபத்தில், அந்த மனிதர் ஆறு மணி நேரத்திற்கும் மேலான தகவல்களை நினைவில் கொள்ள முடியாத, நினைவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டார்.
இந்த 'ஆறு மணிநேர நினைவாற்றல்' கொண்டவரின் பெயர் டேனியல் ஷ்மிட் (Daniel Schmidt). ஒரு விபத்தால் மரணத்துடன் போராடி மீண்ட அவருக்கு, வாழ்க்கை போராட்டமாக மாறியது.
தீவிர சிகிச்சையின் மூலம் அவரது முந்தைய வாழ்க்கையிலிருந்து அவரால் முடிந்ததை நினைவுக்கு கொண்டுவர முடிந்தது. இப்போது, டேனியல் ஷ்மிட் ஆறு மணி நேரத்திற்கு முந்தைய நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை.
குறிப்பு இல்லை என்றால், ஒரு பணி அல்லது இடம் அவரது நினைவுக்கு வராது. விபத்தில் ஏற்பட்ட காயங்கள் அவரது நினைவாற்றலை பறித்தன. தீவிர பிசியோதெரபி மற்றும் பேச்சு சிகிச்சை ஷ்மிட் குணமடைய உதவியது.
அவர் இப்போது மறக்காமல் இருக்க அவரது நாள் பற்றிய சரியான விவரங்களுடன் ஒரு நாட்குறிப்பை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த நிலையிலும் அவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். அவர் தனது போராட்டமான வாழ்க்கைக்கு இடையில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் வாழ்கிறார்.
Credit: Arte
விபத்து நடந்தபோது, அப்போது இருந்த வரத்து காதலியை அவர் முற்றிலுமாக மறந்துவிட்டார். துளி கூட நினைவில் இல்லாததால் அவர்கள் ஒன்றுசேரவில்லை.
ஆனால், இப்போது தனது முன்னாள் காதலியை சந்தித்து தனதுவீபத்தை குறித்து பகிர்ந்து கொண்டதாகவும், அவரை மறந்துவிடாமல் தொடர்பில் இருப்பதற்காக ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இருவரும் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.