விமானத்தில் ஏறமுயன்ற பயணியின் தோள் பையை சோதனையிட்ட அதிகாரிகள்: பையில் இருந்த அந்த பயங்கர பொருள்...
ஜேர்மனியில் தோள் பையுடன் விமானம் ஏற முயன்ற ஒருவரை சோதனையிட்ட அதிகாரிகள், அந்த பைக்குள் வெடிகுண்டு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.
ஜேர்மனியின் Munich விமான நிலையத்தில் விமானம் ஏறுவதற்காக வந்த 28 வயது இளைஞரின் பையை சோதனையிட்ட அதிகாரிகள், அதில் வெடிகுண்டு ஒன்று இருப்பதைக் கண்டு, அதிர்ந்துபோய், உடனடியாக விமான நிலையத்தின் முக்கிய பகுதிகளை மூடினர்.
வெடிகுண்டு நிபுணர்கள் வந்து அந்த வெடிகுண்டைக் கைப்பற்றி பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர்.
தான் சுவிட்சர்லாந்தில் மலையேறச் சென்றபோது தான் அந்த வெடிகுண்டைக் கண்டுபிடித்ததாக அந்த இளைஞர் தெரிவித்தார்.
விமான பாதுகாப்பு மற்றும் வெடிப்பொருட்கள் விதிகளை மீறியதற்காக அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என தெரிகிறது.
பயங்கர வெடிகுண்டுடன் இளைஞர் ஒருவர் விமானம் ஏற முயன்ற சம்பவம் Munich விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.