பிரம்மாண்ட வரி ஏய்ப்பு மோசடியில் மாஸ்டர்மைண்டாக செயல்பட்ட ஜேர்மானியர் கைது
பிரம்மாண்ட வரி ஏய்ப்பு மோசடி ஒன்றில் மாஸ்டர்மைண்டாக செயல்பட்ட ஜேர்மன் சட்டத்தரணி ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மன் அதிகாரிகளின் கோரிக்கையின்பேரில், சுவிஸ் பொலிசார் அந்த நபரை Graubuenden மாகாணத்தில் கைது செய்ததாக சுவிஸ் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுவிஸ் நீதி அமைச்சகம் அவரது பெயரை வெளியிடாத நிலையில், ஊடகம் ஒன்று அவரது பெயர் Hanno Berger என தெரிவித்துள்ளது.
தன்னை ஜேர்மனிக்கு நாடு கடத்துவதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட மோசடி ஒன்றில் Hanno Berger ஈடுபட்டுள்ளதாக ஜேர்மன் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் வாதம் ஒன்றை முன்வைத்துள்ளனர்.
அவரால் ஐரோப்பிய கஜானாக்கள் பலவற்றிற்கு, பல பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் Hanno Berger, 10 ஆண்டுகள் வரை சிறை செல்ல நேரிடும்.