அவசர அவசரமாக சொத்துக்களை சுவிட்சர்லாந்துக்கு மாற்றும் ஜேர்மானிய கோடீஸ்வரர்கள்: ஜேர்மனி தேர்தல் உருவாக்கியுள்ள அச்சம்!
ஜேர்மன் கோடீஸ்வரர்கள் அவசர அவசரமாக தங்கள் சொத்துக்களை சுவிட்சர்லாந்துக்கு மாற்றி வருகிறார்கள்.
அதற்குக் காரணம், ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியில் தேர்தல் நடைபெற உள்ளதுதான்.
அதாவது, ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் பதவியிலிருந்து இறங்கும் நிலையில், சமீபத்திய ஆய்வுகள் அவரது கட்சி பின் தங்கியிருப்பதையும், இடது சாரிக் கட்சியான SPD முன்னேறுவதையும் காட்டுகின்றன. இந்நிலையில், இடது சாரிக் கட்சிகளான SPDயும், Greens கட்சியும் பதவிக்கு வரும் நிலையில், முதலில் அவை பணக்காரர்களைத்தான் குறிவைக்கும்.
அவை பதவிக்கு வந்ததும், சொத்து வரியும், மூதாதையர்களின் சொத்துக்கு வரி விதிக்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்படும்.
பெரும் கோடீஸ்வரர்களுக்கு இந்த விடயம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தொழிலதிபர்கள் பயங்கர திகிலில் இருப்பதாக ஜேர்மன் வரி தொடர்பிலான சட்டத்தரணி ஒருவர் தெரிவிக்கிறார்.
பெரும் கோடீஸ்வரர்களுக்கு இந்த விடயம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தொழிலதிபர்கள் பயங்கர திகிலில் இருப்பதாக ஜேர்மன் வரி தொடர்பிலான சட்டத்தரணி ஒருவர் தெரிவிக்கிறார்.
சுவிஸ் வங்கித் தரவுகள், ஜேர்மானியர்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்த தொகை 2021இன் முதல் காலாண்டில் 5 பில்லியன் டொலர்களிலிருந்து 37.5 பில்லியன் டொலர்களாக உயந்த்துள்ளதைக் காட்டுகின்றன. இதில் பங்குகள், பாண்ட்கள் மற்றும் financial products ஆகியவை அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, தங்கள் சொத்துக்களை சுவிட்சர்லாந்து, Liechtenstein ஆகிய நாடுகளுக்கு மாற்றி வருகின்றார்கள் ஜேர்மன் கோடீஸ்வரர்கள்.
இதுபோக, ஏராளமான ஜேர்மன் தொழிலதிபர்கள், சூரிச் ஏரிக்கு அருகிலுள்ள வரி குறைவான புறநகர் பகுதிகளுக்கு குடியேறுவது தொடர்பாக விசாரித்து வருவதாகவும், உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.