ஜேர்மனியில் மக்கள் மண்ணுக்குள் புதைந்து செத்துக் கொண்டிருக்க... அமைச்சரின் அருவக்கதக்க செயல்! கமெராவில் பதிவான காட்சி
ஜேர்மனி வெள்ளம் காரணமாக பேரழிவிற்கு மத்தியில் இருக்க, அப்போது மூத்த மந்திரி ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சிரித்து பேசிய வீடியோ மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஜேர்மனியில் கடந்த புதன்கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜேர்மனியின் அண்டை நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
திடீர் வெள்ளம் காரணமாக, வீடுகள், அடுக்குமாடி கட்டடங்கள், பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை கிடைத்துள்ள தகவலின் 180 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1300 பேரின் நிலை என்னவென்றே தெரிவில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், மண்ணுக்குள் மக்கள் இன்னும் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி இயற்கை சீற்றத்தால், பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு எப்படி உதவி வழங்கப்படும் என்பது குறித்து அந்நாட்டு ஜனாதிபதி Frank-Walter Steinmeier செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது, மூத்த அமைச்சரான Armin Laschet(60) அவருக்கு பின்னால் சிரித்த படி பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக, Armin Laschet கடும் கண்டனத்திற்குள்ளானார். மக்கள் பலரும், நாடே ஒரு சோகத்தில் இருக்கும் போது, எப்படி இது போன்று எல்லாம் நடந்து கொள்ள முடிகிறது? இது ஒரு அருவருக்க தக்க செயல் என்று இணையத்தில் திட்டி வந்தனர்.
இது குறித்து ஜனாதிபதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எங்கள் அமைச்சரின் நடத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மன்னிக்க முடியாதது, நாட்டின் குடிமக்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், அவரின் இந்த செயல் அருவருப்பனாதாகவே இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து, அமைச்சரும், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவருமான Armin Laschet தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இது போன்ற சூழ்நிலையில் நான் அப்படி நடந்து கொண்டது, பொருத்தமற்றது என ஒப்புக் கொண்டார்.
குறிப்பாக, இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக, மேற்கு ஜேர்மனியில் இருக்கும் Rhineland-Palatinate-ன் Ahrweiler பகுதியில் சுமார் 110 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக கருதப்படும் North Rhine-Westphalia-வில் 47 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பெல்ஜியமில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.