இருவர் கொல்லப்பட்ட ஜேர்மன் கத்திக்குத்து சம்பவம்: ஆசிய நாட்டவர் கைது

Afghanistan Crime Migrants
By Arbin Jan 22, 2025 08:34 PM GMT
Report

ஜேர்மனியின் அஷாஃபென்பர்க் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மழலையர் பள்ளி குழு

குறித்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை மற்றும் மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோர் தெரிவித்தனர்.

இருவர் கொல்லப்பட்ட ஜேர்மன் கத்திக்குத்து சம்பவம்: ஆசிய நாட்டவர் கைது | German Park Stabbing Afghan Suspect Arrested

கைதான அந்த 28 வயது ஆப்கான் நபர் பூங்காவில் உள்ள ஒரு மழலையர் பள்ளி குழுவை சமையலறை கத்தியால் வேண்டுமென்றே தாக்கியதாக பவேரிய உள்விவகார அமைச்சர் ஜோச்சிம் ஹெர்மன் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 41 வயதுடைய ஒரு வழிப்போக்கர், ஒரு ஜேர்மானியர் மற்றும் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்தனர், அதே நேரத்தில் இரண்டு வயது சிரியா நாட்டவரான சிறுமி ஒருவர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... தந்தை மற்றும் மகளின் முதல் புகைப்படம் வெளியானது

குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... தந்தை மற்றும் மகளின் முதல் புகைப்படம் வெளியானது

சம்பவம் நடந்த பூங்காவிலே தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 61 வயது முதியவர், ஒரு குழந்தை மற்றும் ஒரு ஆசிரியர் உட்பட மேலும் மூவர் காயமடைந்ததாக பவேரிய சுகாதார அமைச்சர் ஜூடித் கெர்லாச் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வன்முறை நடத்தை பின்னணியைக் கொண்ட அந்த நபர் உளவியல் சிகிச்சையில் இருந்து வந்தார் என்றும், புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், டிசம்பரில் தானாக முன்வந்து ஜேர்மனியை விட்டு வெளியேறுவதாகக் கூறியுள்ளார் எனவும் தகவல் வெளியானது.

இருவர் கொல்லப்பட்ட ஜேர்மன் கத்திக்குத்து சம்பவம்: ஆசிய நாட்டவர் கைது | German Park Stabbing Afghan Suspect Arrested

தொடர்ச்சியான வன்முறை

ஆனால் சிகிச்சை காரணமாக அவர் வெளியேறவில்லை என உள்விவகார அமைச்சர் ஜோச்சிம் ஹெர்மன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பிப்ரவரி 23 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,

பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வு குறித்த கவலைகள் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள ஜேர்மனியில் தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் தற்போது இந்தக் கத்திக்குத்துத் தாக்குதலும் விவாதங்களை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

இருவர் கொல்லப்பட்ட ஜேர்மன் கத்திக்குத்து சம்பவம்: ஆசிய நாட்டவர் கைது | German Park Stabbing Afghan Suspect Arrested

டிசம்பர் 20 ஆம் திகதி, மாக்ட்பர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்து சென்ற மக்கள் மீது சவுதி அரேபிய மருத்துவர் ஒருவர் காரை மோதியதில் ஆறு பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 200 பேர் காயங்களுடன் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US