ஓய்வு பெற்ற ஜேர்மானியர் வீட்டிலிருந்த அந்த பொருட்கள்... 200,000 பவுண்டுகள் அபராதம் விதிப்பு
ஓய்வு பெற்ற ஜேர்மானியர் ஒருவர் தன் வீட்டில் பீரங்கி ஒன்றையும் டேங்க் ஒன்றையும் வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து, அவருக்கு 200,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியிலுள்ள Heikendorf என்ற இடத்தில் வாழும் Klaus-Dieter Flick (84) என்ற ஓய்வு பெற்ற புரோக்கர், இரண்டாம் உலகப்போர்க்கால டேங்க் ஒன்றையும், போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் பீரங்கி ஒன்றையும், அது போக ஏராளமான ஆயுதங்களையும் தன் வீட்டில் வைத்துள்ளார்.
பொலிசார் மேற்கொண்ட சோதனை ஒன்றின்போது இந்த ஆயுதங்களை Flick வைத்திருந்தது தெரியவந்தது.தான் அந்த ஆயுதங்களை 1977ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வாங்கியதாக Flick நீதிபதியிடம் தெரிவித்தார்.
ஆனாலும், போர்க்கால ஆயுதங்கள் கட்டுப்பாடு சட்டத்தை தான் மீறியதை ஒப்புக்கொண்டார் Flick. ஆகவே, அவருக்கு 14 மாத சிறைத்தண்டனையும், 213,000 பவுண்டுகள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, Flick உடனடியாக சிறை செல்லவேண்டியதில்லை என்று கூறிவிட்டார்.
அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்யவேண்டியதில்லை, அதை விற்றுவிட்டால் போதும் என்று நீதிபதி கூறிவிட்டாலும், சுமார் 20 இராணுவ வீரர்கள், அந்த ஆயுதங்களை Flick வீட்டிலிருந்து அகற்றுவதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.