இறைச்சி உண்ணும் ஆண்களுடன் பெண்கள் உறவு கொள்ள வேண்டாம்! ஜேர்மனியில் பரபரப்பை கிளப்பிய PETA
இறைச்சி உண்ணும் ஆண்களிடமிருந்து பெண்கள் உடலுறவை நிராகரிக்க வேண்டும் என்று PETA ஜேர்மனி கூறியுள்ளது.
ஆண்களுக்கு 41 சதவீதம் இறைச்சி வரி விதிக்கப்படவேண்டும் என்று PETA ஜேர்மனியின் பிரச்சாரக் குழுத் தலைவர் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பெண்கள் "உலகைக் காப்பாற்ற பாலியல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும்" மற்றும் இறைச்சி சாப்பிடும் ஆண்களுடன் உடலுறவு கொள்வதை (fornicating) நிறுத்த வேண்டும் என்று விலங்குகள் உரிமைக் குழுவான PETA-வின் (People for the Ethical Treatment of Animals) ஜேர்மன் கிளை கூறுகிறது .
காலநிலை நெருக்கடிக்கு (climate crisis) பெண்களை விட ஆண்கள் அதிக பங்களிப்பை வழங்குகிறார்கள், குறிப்பாக இறைச்சி சாப்பிடுவதன் மூலமாக என்று ஜேர்மன் PETA கூறுகிறது.
PETA கடந்த ஆண்டு ஆராய்ச்சி மேற்கோளிட்டுள்ளது. அதில், பெண்களை விட ஆண்கள் 41% அதிக பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதாகக் கூறியது.
இப்போது நச்சுதன்மைகொண்ட ஆண்மையும் காலநிலைக்கு தீங்கு விளைவிக்கும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் உள்ளன" என்று PETA ஜேர்மனியின் பிரச்சாரக் குழுத் தலைவர் டேனியல் காக்ஸ் கூறியுள்ளார்.
மேலும், ஆண்களுக்கு 41 சதவீதம் இறைச்சி வரியை திணிக்கவும் டேனியல் காக்ஸ் பரிந்துரைத்தார்.
ஆனால், ஜேர்மனியில் இந்த சர்ச்சையான கருத்துக்கள் சரியாகப் போகவில்லை, செய்தித்தாள்கள் தங்கள் முதல் பக்கங்களில் காக்ஸை கிழித்தெறிந்தன. இந்தக் கருத்துக்கள் ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.