ஜேர்மனியில் நூற்றுக்கனக்கான ஏடிஎம்களை கொள்ளையடித்த கும்பலை 18 மாதங்கள் திட்டமிட்டு பிடித்த பொலிஸ்!
ஜேர்மனியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஏடிஎம் இயந்திரங்களை நூதன முறையில் கொள்ளையடித்த சந்தேக கும்பலை பொலிஸார் ஒன்றரை வருட போராட்டத்திற்கு பிறகு கைது செய்துள்ளனர்.
ஜேர்மனியில் ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் பண இயந்திரங்களை வெடிக்கச் செய்வதற்கான பயிற்சி மையம் அமைத்த குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 9 பேரை நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியில் உள்ள காவல்துறையினர் கைது செய்துள்ளதாக ஐரோப்பிய யூனியன் காவல் துறை யூரோபோல் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
யூரோபோலின் அறிக்கையின்படி, 18 மாத எல்லை தாண்டிய விசாரணையின் போது மத்திய டச்சு நகரமான உட்ரெக்டில் (Utrecht) உள்ள தற்காலிக பயிற்சி மையம் இந்த கும்பலின் பிடிக்க உதவியது.
நெதர்லாந்தில் ஒரு கலைத் திட்டத்திற்காக தேவைப்படுகிறது என கூறி, 29 வயதான டச்சுக்காரர் பல ஏடிஎம்களை ஆர்டர் செய்தபோது சந்தேகமடைந்ததாக வடக்கு ஜேர்மன் நகரமான ஒஸ்னாப்ரூக் (Osnabrueck) காவல்துறையினர் தெரிவித்தனர்.
இயந்திரங்கள் உட்ரெக்டில் உள்ள ஒரு கிடங்கிற்கு வழங்கப்பட்டன, அங்கு அந்த நபரும் ஒரு கூட்டாளியும் அந்த ஏடிஎம்களை வெடிக்கச்செய்து பணத்தை வெளியே எடுப்பதற்கான வழிகளை சோதித்துள்ளனர், அவர்களின் முயற்சிகள் வீடியோ பதிவு செய்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
Photo: Sachelle Babbar/Zuma/Rex/Shutterstock
"இந்த இருவரும் வெவ்வேறு மாதிரியான ஏடிஎம்களை ஆர்டர் செய்து, அவற்றை எவ்வாறு திறம்பட உடைப்பது என்பது குறித்த டுடோரியல் விடீயோக்களை பதிவுசெய்துள்ளனர்" என்று யூரோபோல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய நெதர்லாந்தில் உள்ள காவல்துறையினர், 29 வயதான அவர் பயிற்சி மையத்தில் வெடிக்கும் கருவியை சோதனை செய்தபோது செப்டம்பர் 2020-இல் கொல்லப்பட்டதாக கூறினார். ஒரு கூட்டாளி காயமடைந்து கைது செய்யப்பட்டார். டச்சு மற்றும் ஜேர்மன் தனியுரிமைச் சட்டங்களின்படி அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், நெதர்லாந்து காவல்துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை 3 சந்தேக நபர்களை கைது செய்தனர் மற்றும் ஏழு இடங்களில் சோதனையிட்டனர், அங்கு அவர்கள் ஏடிஎம்களை வெடிக்க பயன்படுத்திய உபகரணங்களைக் கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து, விசாரணைகளின் போது மொத்தம் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக Osnabrueck காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த வாரம் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள ஜேர்மனிக்கு அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கும்பல் ஜேர்மனி முழுவதும் குறைந்தது 15 ஏடிஎம்களை வெடிக்கச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இதனால் மில்லியன் கணக்கான யூரோக்களுக்கு சேதம் ஏற்பட்டது.
2020-ஆம் ஆண்டில் ஜேர்மனியில் சுமார் 414 ஏடிஎம்கள் இதுபோல் வெடிக்கச்செய்து கொல்லியடிக்கப்பட்டன, இது முந்தைய ஆண்டை விட 19% அதிகமாகும்.
Photo: ANP
சந்தேக நபர்களில் மூன்றில் இரண்டு பங்கு நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்று ஜேர்மன் அதிகாரிகள் நம்புகின்றனர்.
நெதர்லாந்து வங்கிகளால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அந்த கும்பல் ஜேர்மனியில் தங்கள் கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளனர்.
"எல்லை தாண்டிய விசாரணை அற்புதமாக வேலை செய்தது" என்று Osnabrueck காவல்துறை தலைமை அதிகாரி மைக்கேல் மாஸ்மேன் (Michael Massmann) கூறினார்.
இந்நிலையில், "நாங்கள் வழக்கைத் தொடரப் போகிறோம், விடமாட்டோம்" என்று மைக்கேல் மாஸ்மேன் கூறினார்.
இது, சர்வதேச அளவில் ஏடிஎம் கொள்ளை சம்பவங்களுக்கு எதிரான மிகப்பெரிய அடியாகும். இது ஜேர்மன் மற்றும் நெதர்லாந்து காவல்துறையின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.