அமெரிக்க அதிகாரிகள் கொடுத்த ரகசிய தகவல்: ஜேர்மனியில் கட்டுக் கட்டாக சிக்கிய அமெரிக்க டொலர் நோட்டுகள்
அமெரிக்க அதிகாரிகள் கொடுத்த ரகசிய தகவலின்பேரில் சோதனை மேற்கொண்ட ஜேர்மன் பொலிசார், கட்டுக் கட்டாக அமெரிக்க டொலர் நோட்டுக்களை கைப்பற்றினார்கள். ஆனால்...
சோதனை மேற்கொண்ட ஜேர்மன் பொலிசார்
அமெரிக்க அதிகாரிகள் கொடுத்த ரகசிய தகவலின்பேரில், ஜேர்மன் மாகாணமான Schleswig-Holsteinஇல் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலும், இரண்டு அலுவலகங்களிலும் பொலிசார் தீவிர சோதனை மேற்கொண்டார்கள்.
அப்போது, 75 பெட்டிகளில் அமெரிக்க டொலர் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. ஆனால், அவற்றைப் பார்த்தவுடனேயே, அவை போலி நோட்டுக்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
Bei Durchsuchungen einer Wohnung und zweier Firmenadressen in #Jübek (Kreis Schleswig-Flensburg) und #Hamburg haben Ermittler des #Landeskriminalamtes Schleswig-Holstein #Falschgeld in Höhe von über 103 Millionen US-Dollar sichergestellt. Mehr Infos: https://t.co/mq8jb4ZEvH pic.twitter.com/u0jOsSgOBK
— Polizei SH (@SH_Polizei) April 5, 2024
அந்த நோட்டுக்கள் துருக்கியிலிருந்து ஜேர்மனி வழியாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவதற்காக, ஜேர்மனியில் அந்த குறிப்பிட்ட கட்டிடங்களில் சேமித்துவைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் கருதுகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக 42 வயது நபர் ஒருவரைக் கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |