புடினைப் புகழ்ந்து புத்தகம் எழுதுவதற்காக பணம் பெற்ற ஜேர்மானியர்: பதிப்பகம் எடுத்துள்ள நடவடிக்கை
சமீபத்தில் லீக்கான சில ரகசிய ஆவணங்களிலிருந்து, புகழ் பெற்ற ஜேர்மன் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ஒருவர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை புகழ்ந்து புத்தகம் எழுதுவதற்காக புடின் ஆதரவாளர் ஒருவரிடம் பணம் பெற்றது தெரியவந்துள்ளது.
புகழ் பெற்ற ஜேர்மன் எழுத்தாளர்
விருதுகள் பல வென்ற Hubert Seipel என்னும் ஜேர்மானியர், புகழ் பெற்ற எழுத்தாளரும் திரைப்பட இயக்குநரும் ஆவார். சமீபத்தில் லீக்கான சில ரகசிய ஆவணங்களிலிருந்து, Seipel ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை புகழ்ந்தும், அவர் மீது பரிதாபம் ஏற்படும் வகையிலும் புத்தகம் எழுதுவதற்காக, புடின் ஆதரவாளர் ஒருவரிடம் 600,000 யூரோக்கள் பெற்றதாக தகவல் வெளியானது.
விசாரணையில், ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்புகொண்ட தொழிலதிபரான Alexei Mordashov என்பவரிடம் தான் பணம் பெற்றது உண்மைதான் என Seipel ஒப்புக்கொண்டார்.
ஆகவே, அவரது புத்தகங்களை வெளியிட்ட Hoffmann und Campe என்னும் ஜேர்மானிய பதிப்பகம், அவரது புத்தகங்களின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
The Guardian
திரைப்படங்களுக்கும் சிக்கல்
மேலும், புடினை பல முறை சந்தித்து பேட்டி எடுத்திருந்தார் Seipel. அந்த சந்திப்புகளை NDR என்னும் தொலைக்காட்சி நிறுவனம் ஆவணப்படங்களாக எடுத்துவைத்துள்ளது. ஆக, அந்த நிறுவனமும் ஆவணப்படங்களை வெளியிடுவதை நிறுத்திவைத்துள்ளதுடன், Seipel மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.
The Guardian
தான் புத்தகங்களுக்காக பணம் வாங்கியது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ள Seipel, ஆனால், புத்தகங்களுக்காக மட்டுமே தான் பணம் வாங்கியதாகவும், திரைப்படங்களுக்காகவோ, தொலைக்காட்சி நேர்காணல்களுக்காகவோ பணம் பெறவில்லை என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |